
http://www.facebook.com/#!/photo.php?pid=253748&id=100000728466588&ref=notif¬if_t=photo_reply
முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் பல விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து கிடந்தாலும், இறைவனின் வல்லமையையும் அவனின் பண்புகளையும் பற்றி பெரும்பாலான முஸ்லிம்கள் ஒத்த கருத்தில் உள்ளனர்.. சைத்தானின் பற்றி அவருடைய நிலைபாடுதான் என்னுடைய நிலைபாடும்.. அந்த விசயத்தை நான் உங்களுக்கு என் வார்தைகாலக தட்டச்சு செய்து அனுப்பினாலும் கருத்தின் சாராம்சம் ஒன்றாக தான் இருக்கும்.. குரான் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளை தான் நாங்கள் எங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்று செயல் பட்டு கொண்டிருக்கிறோம்.. மேலும் சைத்தானை பற்றிய அக்கருத்தை நீங்கள் ஏற்கவோ நம்பவோ அலசவோ வேண்டுமென்றால் கடவுள் பற்றிய சரியான புரிந்துணர்வு வேண்டும்.. தலையை விட்டுட்டு வாலை ஆராய்வதில் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பதை நான் திண்ணமாக நம்புகிறேன்.. என்னுடைய கடவுள் கோட்பாடு என்னவென்றால்.. "இறைவன் ஒருவனே, அவன் யாரிடத்திலும் எவரிடத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்தை கொண்டும் எந்த ஒரு தேவையுமற்ற நித்ய ஜீவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை அவன் யாராலும் பெறப்படவுமில்லை.. அவனுக்கு நிகராக இவ்வுலகத்திலும் எவ்வுலகதிலும் எந்த கற்களுமோ, சிலைகளோ, மனிதர்களோ, தீர்கதரிசிகளோ, அவதாரங்களோ, கன்னியாஸ்திரிகளோ, சுவாமிகளோ, தலைவர்களோ வேற எந்த உருவமோ உவமையோ இல்லை.. அவன் நாடியதுதான் இவ்வுலகின் நியதி.. அவன் சொல்படியே ஒரு கட்டுகோப்பான பாதையில் இவ்வுலகமும் அண்ட சராசரங்களும் இயங்குகிறது.. ஒரு மனிதனை அழிப்பதோ அதே நிலையில் அவனை திரும்ப ஆக்குவதோ அவனால் மட்டுமே முடியும்.. அவன் தான் இந்த உலகத்தையும் வானுக்கும் பூமிக்கும மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தது பின்னர் அவனுக்கே உரிய ஒரு இடத்தில அமர்ந்து ஆட்சி செலுத்துகிறான்.. தன்னுடைய வல்லமைகளை அறிந்து தன சொல் படி கேட்டு நடக்கின்ற வானவர் கூட்டத்தையும், தன்னுடைய வல்லமைகள் மற்றும் ஆற்றல்களை உணர்ந்து பகுத்து ஆராய்ந்து பின்பற்ற கூடிய மனித மற்றும் ஜின் இனத்தையும் அவனே படைத்தான்.. அவன் கட்டளைகளை அப்படியே ஏற்று நடக்க வானவர்கள் இருக்கும் பொழுது மற்ற இரு இனங்களுக்கு பகுத்தறிவு என்ற உயர்ந்த அறிவையும் கொடுத்து, இவ்வுலகம் பற்றிய வானவர்கள் கூட அறியாத ஞானத்தையும் கற்று கொடுத்தான்.. எல்லாம் வல்ல இறைவன் அவனுடைய ஆற்றலை விளங்க வைக்கும் பொருட்டு, அவனால் படைக்கப்பட்ட மனிதன் எல்லா சூழ்நிலைகளையும் அவனுக்கு நன்றியுள்ளவனாக அவனை மட்டும வணங்கி வழிபட கூடியவனாக இருக்கின்றானா என்பதை சோதிக்கும் பொருட்டு அவனை வழி கெடுக்கும் சூழ்நிலைகளை சைத்தான் என்ற ஜின்னின் மூலம் உருவாக்கி கொடுத்திருக்கின்றான்.. சைத்தானை எவ்வாறு நிராகரிப்பது ஒரு இறைவனை மட்டும் எப்படி வணங்குவது என்ற வழிமுறைகளையும் வேதங்கள் மற்றும் தூதுவர்கள் மூலம் வழி தவர்ந்து சென்ற, செல்லும். செல்ல இருக்கின்ற மனித சமுதாயத்தை நேர்வழிபடுத்துகின்றான்.. இவ்வளையும் செய்த அந்த கருணையாளன், இந்த உலகத்தில் அவன் செய்த நற்காரியங்களுக்கு பரிசாக சுவர்க்கம் என்ற மற்றொரு உலகத்தையும், அவன் பேச்சை கேட்காமல் உதாசினபடுத்திய மற்றும் அவனை அவன் கூறிய படி ஏற்றுகொள்ளாமல் தன் சொந்த கற்பனையின் படி நம்பி மரணித்தவர்கள் மற்றும், இன படுகொலைகள், ஆக்கிரமிப்புகள், பித்தலாட்டங்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்து தன் சுயலாபத்துக்காக மனிதனையும் கொள்ளும் அரசியல் மிருகங்கள், இவ்வுலகில் தண்டனை அனுபவிக்காமல் த்யாகிகளாய் உயிர் துறந்த எத்தனையோ போலி சாமியார்கள், ஆகிய அனைவரையும் நியாயமான முறையில் விசாரித்து தண்டனை கொடுக்க நரகலோகதையும் சித்தபடுதியுள்ளான்.." அன்பு சகோதரனே நான் நம்பும் கடவுள் கொள்கை இதுதான்.. மிக தெளிவாக நம்புகிறேன்.. மேற்கூறிய எவ்விசயதிலும் எனக்கு ஒரு துளி கூட நம்பிக்கை குறைவு அல்ல..
என்னுடைய இந்த நம்பிக்கை என் தாய் தந்தை எனக்கு கற்று கொடுத்தது அல்ல.. நான் ஆகா உணர்ந்து ஆராய்ந்து நம்பும் விஷயங்கள்.. என் தாய் தந்தை அறிந்து வைத்ததிருந்த இஸ்லாம் மதத்தின் கடவுள் கொள்கை வேறு.. குரான் படித்து நான் தெளிவடைந்து என் தாய் தந்தையையும் தெளிவடைய வைத்தோம் நண்பரே.. ஆராயும்.. ஆராயும்.. ஆராய்பவர்களுக்கு இககுரான் பல அத்தாட்சிகளை கொண்டுள்ளது.. உனக்கும் எனக்குமான ஒற்றுமை ஒரு விசயத்தை ஆராய்வதில் இருக்கின்றது என நம்புகிறேன்.. பல வருடங்களுக்கு முன்பு எனக்கு தோன்றிய அதே கேள்விகள் இன்று உங்களால் கேக்கபடுகிறது.. எனக்கு கிடைத்த விடைகள் உங்களுக்கு தந்திருக்கின்றேன்.. ஏற்று கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை.. ஆனால் நீங்கள் நரகத்தில் தண்டிக்கபடகூடது என்றால் இந்த உண்மையை நீங்கள் ஏற்று தான் ஆகவேண்டும்.. ஆனந்தமா வேதனையா தீர்மானித்து கொள்ளுங்கள்.. உங்களுடைய தற்போதைய நம்பிக்கை உண்மையாக (ஒரு வேளை ) இருந்தால் நீங்கள் பிழைத்த கொள்வீர்கள்.. அது பொய்யாக இருந்து இஸ்லாம் கூறும் விஷயம் உண்மையாக இருந்தால்? குரான் பின் வருமாறு கூறுகிறது தன்னுடைய ஐம்பதாவது அத்தியாயத்தில்
"மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (16) (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (17) கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (18) மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்) (19) மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும். (20) அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும். (21) "நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது." (என்று கூறப்படும்). (22) அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) "இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது" என்று கூறுவார். (23) "மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள். (24) "(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான். (25) ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்" (என்றுங் கூறப்படும்). (26) (அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; "எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-" (27) "என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்" என்று (அல்லாஹ்) கூறுவான். (28) (எனவே என்னுடைய) அச்சொல் "என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்" (என்றும் அல்லாஹ் கூறுவான்). (29) நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! (30) (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். (31) "இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது)." (32) எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது). (33) "ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும்" (என்று கூறப்படும்). (34) அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. (35)"
" (நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக. " அல் குரான் 17 :81
0 comments: on "என்னுடைய கடவுள் கொள்கை"
Post a Comment